கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) காலை 9 மணியளவில் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த லாரி மோதிய வேகத்தில் அந்தப் பெண் பல அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டு, ஓடும் லாரியின் அடியில் சிக்கி தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். லாரியின் ராட்சத சக்கரங்களுக்கு அடியில் அவர் சிக்காமல், அதிர்ஷ்டவசமாக லாரியின் நடுப்பகுதியில் உள்ள இடைவெளியில் சிக்கியதால் நூலிழையில் மாபெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

“>

விபத்து நடந்தவுடன் லாரி நிறுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியின் பிரேக் காரணமா அல்லது ஓட்டுநரின் அஜாக்கிரதையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.