திருப்பூரில் பனியன் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து வேலை தேடி வந்த பெண்ணிற்கு, வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி முகவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் விளம்பரத்தில் இருந்த விபரங்களை நம்பி நிறுவனத்தை அணுகிய போது, அங்கு இடைத்தரகராகச் செயல்பட்ட முகவர் அந்தப் பெண்ணிற்கு நிச்சயம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். வேலை தேடி வந்த இடத்தில் தனியாக இருந்த பெண்ணைச் சாதகமாகப் பயன்படுத்தி அவர் மீது கடுமையான பாலியல் தாக்குதலை அந்த முகவர் நடத்தியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளியான முகவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

<a href=”http://

“>

மேலும், இதுபோன்ற அங்கீகாரமற்ற முகவர்கள் மற்றும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பிப் பெண்கள் ஏமாற வேண்டாம் என்றும், பாதுகாப்பு விபரங்களை உறுதி செய்த பின்னரே நிறுவனங்களை அணுக வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.