“தோற்றாலும் மக்களின் இதயங்களை வென்ற தங்கமகன்.. மைதானத்தில் அரங்கேறிய அந்த உன்னதமான நெகிழ்ச்சித் தருணம்!” — தகுதிச்சுற்று 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பரிதாபமாக வெளியேறிய போதிலும், அந்த அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி செய்த  காரியம் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் நெகிழ வைத்துள்ளது!

இந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் அணியைத் தன் தோள்களில் சுமந்து பிளேஆஃப் வரை அழைத்து வந்த வைபவ், குவாலிஃபையர் 2-ல் வெறும் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அசுர வேட்டை ஆடினார். சதம் அடிக்க வெறும் 4 ரன்களே தேவைப்பட்ட நிலையில் அவுட்டாகி, மேட்சும் கையை விட்டுப் போன ஏமாற்றத்தில் விம்மி விம்மி அழுத போதிலும், மைதானத்தில் தன்னைச் சந்திக்க வந்த போலீஸ் ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை.

“>

போட்டி முடிந்ததும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினருடன் கனிவோடு செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு, அவர்களுக்கு மரியாதையுடன் வணக்கம் செலுத்திவிட்டுச் சென்ற வைபவ்வின் இந்த “பண்பாடு” குறித்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இளம் வயதிலேயே இத்தகைய உன்னத கலாச்சாரத்தைக் காட்டிய வைபவ்வை நெட்டிசன்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வேளையில், கிரிக்கெட் வரலாற்றிலும் அவர் ஒரு இமாலய சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த அதிர்ஷ்டமில்லாத நாக்-அவுட் போட்டியின் போது, சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத ஒரு அன்-கேப்டு (Uncapped) வீரராகத் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 1000 ரன்களை அதிவேகமாகக் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் 545 பந்துகளில் செய்த சாதனையை, வெறும் 440 பந்துகளில் தவிடுபொடியாக்கி வரலாற்றிலேயே அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய பேட்ஸ்மேன் என்ற மகுடத்தைச் சூடியுள்ளார்.

அதுமட்டுமன்றி, ஒரே ஐபிஎல் சீசனில் 700 ரன்களுக்கு மேல் குவித்த முதல் ‘அறிமுகமில்லா’ வீரர் என்ற அசைக்க முடியாத பெருமையையும் பெற்று, ஆர்சிபி மற்றும் குஜராத் மோதும் இறுதிப்போட்டி பரபரப்புக்கு மத்தியிலும் இணையத்தின் லேட்டஸ்ட் சூப்பர் ஹீரோவாக டாப் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறார்!