பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் வங்கதேச வீரர்களுக்கு இடையே களத்தில் சுவாரசியமான வார்த்தைப்போர் அரங்கேறியுள்ளது.
போட்டியில் 437 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி, 162 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது ரிஸ்வான் களம் புகுந்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய அவர், பின்னர் தனது 14-வது டெஸ்ட் அரைசதத்தைக் கடந்து அணியை மீட்டார்.
எனினும், ஆட்டத்தின் போது சைட்ஸ்கிரீன் அருகில் அசைவுகள் இருப்பதாகக் கூறி ரிஸ்வான் போட்டியை நிறுத்தினார். இதனால் அதிருப்தியடைந்த வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், ரிஸ்வானை நோக்கிப் பேட்டிங் செய்வதுதான் உங்கள் வேலை என்று ஸ்டம்ப் மைக்கில் கேட்கும் படி கூறினார்.
ரிஸ்வான் நேரத்தை வீணடிப்பதற்காகவும், மிகையாக நடிப்பதற்காகவும் அவரிடமிருந்து “50 பைசா கழிக்கப்பட வேண்டும்” என்று லிட்டன் தாஸ் கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும் அங்கிருந்த மற்ற வங்கதேச வீரர்களும், ரிஸ்வான் நன்றாக நடிப்பதால் அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வேடிக்கையாகப் பேசினர்.
🚨 HUGE VERBAL CLASH BETWEEN MOHAMMAD RIZWAN AND LITON DAS..!!! 🤯
– Rizwan was complaining about the side screen, Liton Das interfered and had an argument with Rizwan.
Litton Das: “Yeh kya kar rhe ho?”
Rizwan: “Woh dekh wo dekh wo khada hai”
Litton: “Udhar kya dekh rahe ho?… pic.twitter.com/6ZZUFcRQ4O
— Abdullah. (@Abdullahh_56) May 19, 2026
“>
இத்தகைய கிண்டல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிஸ்வான், நான்காம் நாள் ஆட்ட முடிவில் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அன்றைய நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்ததால், இந்த இரண்டாவது போட்டியிலும் இரு அணிகளுக்கும் இடையிலான பதற்றமும் சுவாரசியமும் களம் முழுக்கத் தெளிவாகத் தெரிந்தது.
