அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் முன்கூட்டியே கணித்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், வரவிருக்கும் ஆபத்துகள் குறித்து அவர் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான செய்திகள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வரும் நிலையில், பலரும் இது உண்மையாகவே முன்கூட்டியே கணிக்கப்பட்டதா அல்லது வீடியோவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.
Little did Karoline Leavitt know just how true these words would be… pic.twitter.com/im1gECQbs1
— Girl patriot 🙏 🇺🇸 🦅 (@Girlpatriot1974) April 26, 2026
“>
இருப்பினும், இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் ஏதுமின்றி இத்தகைய தகவல்கள் பரப்பப்படுவதால், இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது எதேச்சையாக நடந்த உரையாடலா என்ற கோணத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் தற்போதைய அரசியல் சூழலில் இத்தகைய வீடியோக்கள் பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
