தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தமிழக அரசியலில் பாஜக ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே கொண்டுள்ளதாகவும், அக்கட்சியின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் சூழல் பற்றி எதுவும் தெரியாது என்றும் விமர்சித்துள்ளார்.
திமுக மற்றும் பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாகவும், ஊழல் புகாரில் சிக்கிய திமுக அமைச்சர்கள் மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தவெக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளதாகவும், வரவிருக்கும் தேர்தலில் விஜய் நிச்சயம் வெற்றி பெற்று முதலமைச்சராவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சீமான் குறித்துப் பேசிய நிர்மல் குமார், கடந்த 2024 தேர்தலில் தவெக தொண்டர்களின் ஆதரவு இருந்ததால்தான் சீமானால் 8 சதவீத வாக்குகளைப் பெற முடிந்தது என்று குறிப்பிட்டார். அப்போது விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த சீமான், தற்போது விஜய் யாருக்கும் அடிபணிய மாட்டேன் என்று சொன்னதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விமர்சிப்பதாகக் கூறினார். சீமான் அரசியலில் சாதிக்க விரும்புவதை விட ஒரு யூடியூபர் போலவே செயல்பட்டு வருவதாகவும், அவர் ஒரு காமெடி செய்பவர் என்றும் நிர்மல் குமார் கடுமையாகச் சாடினார்.
தவெக தொண்டர்கள் அளித்த ஆதரவால் தான் சீமான் 8% வாக்கு பெற்றார் – மதுரையில் தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் பேட்டி #Seeman #NTK #TVK #CTRNirmalkumar #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/DkAPuGkawW
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 7, 2026
“>
முன்னதாக வைகோ மற்றும் விஜயகாந்த் போன்றவர்களுக்குக் கிடைத்த அந்த மூன்றாவது அணி வாக்குகளை இம்முறை தவெக முழுமையாகப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
