2026 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களைக் கேலி செய்யவோ அல்லது அவமானப்படுத்தவோ வேண்டாம் என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட திரைக்குப் பின்னால்  எடுக்கப்பட்ட வீடியோவில், “எதிரணி வீரர்களிடம் தேவையில்லாத வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்; நாம் நேர்மையான முறையில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி, நமது திறமையால் மட்டுமே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்” என்று சூர்யகுமார் உருக்கமாகப் பேசியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

“>

களத்தில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அவரது இந்தச் செயல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.