கொழும்பில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை மீண்டும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய போதிலும், அவர் பந்தை வீசும்போது ஒரு நொடி நின்று வீசும் விநோத பாணி விதிகளுக்கு உட்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
pic.twitter.com/VctBrqyMLS
Usama Tariq’s action is unique and borderline questionable, but we must consider individual biomechanics. We have seen similar cases with Shoaib Akhtar and Muralitharan. If the ICC clears him, we can’t complain unless he is found guilty again.That…
— Prem Sawanth (@SawanthPrem) February 11, 2026
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, கால்பந்து போட்டிகளில் பெனால்டி வாய்ப்பின் போது ஓடி வந்து இடையில் நிற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது போல, கிரிக்கெட்டிலும் இத்தகைய செயல்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்திய நட்சத்திர வீரர் அஸ்வின் இதற்கு மாறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார். பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு விருப்பமானவாறு திசையை மாற்றி அடிப்பதற்கு எவ்வித தடையும் இல்லாத நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன் மீதான புகார்களுக்குப் பதிலளித்துள்ள யுஸ்மான் தாரிக், தனது கையில் இயற்கையிலேயே இரண்டு மூட்டுகள் போன்ற அமைப்பு இருப்பதால் பந்துவீசும்போது கை வளைந்திருப்பது போலத் தோன்றும் என்றும், இது உயிரியல் ரீதியான அம்சம் என்பதால் ஐசிசி பரிசோதனைகளில் தனது பந்துவீச்சு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
