ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள ரயில் ஒன்றில், பயணி ஒருவர் சக பயணிகளுக்கு மத்தியில் இருக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் அருவருப்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இந்தியாவில் இதுபோன்ற அநாகரீகமான சம்பவங்கள் நடந்தால், ‘MAGA’ போன்ற வெளிநாட்டு இனவாதக் கூட்டத்தினர் இந்தியாவைப் பற்றியும் நம் கலாச்சாரம் பற்றியும் மிகக் கேவலமாக விமர்சனம் செய்வார்கள். ஆனால், தற்போது ஒரு மேலைநாட்டிலேயே இவ்வளவு மோசமான செயல் நடந்தும், அவர்கள் எவ்வித விமர்சனமும் செய்யாமல் மௌனம் காப்பது அவர்களின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
If this had happened in India, the entire MAGA racist crowd would be swarming this post.
But because this is Berlin, Germany- silence.🤐 pic.twitter.com/1wmZRfpeb3— Meru (@MeruOnX) January 18, 2026
சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து உலகிற்குப் பாடம் எடுக்கும் மேலைநாடுகளில் இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் நடப்பது இது முதன்முறை அல்ல. இருப்பினும், நம் நாட்டை மட்டம்தட்டத் துடிக்கும் வெளிநாட்டு நபர்கள், தங்கள் நாடுகளில் நடக்கும் இதுபோன்ற அழுக்கான விஷயங்களைக் கண்டுகொள்வதே இல்லை. மேலைநாட்டவர் செய்தால் அமைதியாக இருப்பதும், இந்தியர்கள் செய்தால் அதைப் பூதாகரமாக்கி இனவெறியைத் தூண்டுவதும் எந்த விதத்தில் நியாயம் என இந்திய நெட்டிசன்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டமாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
