பணம் இல்லையென்றால் சிகிச்சை கிடைக்குமா என்ற பயத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு, ஒரு மருத்துவரின் அன்பு கலந்த செயல் கடவுளின் ஆசீர்வாதமாக அமைகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், வயதான மூதாட்டி ஒருவர் தனது உடல்நலம் குன்றிய பேரனை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் செல்கிறார்.
சிகிச்சைக்குப் பிறகு, அந்த மூதாட்டி தன்னிடம் இருந்த சில சில்லறை நோட்டுகளைக் கத்தரித்த கைகளால் மருத்துவரிடம் நீட்டுகிறார். ஆனால், அந்த மருத்துவர் மிகவும் மரியாதையுடனும் அன்படனும் அந்தப் பணத்தைப் பெற மறுத்துவிட்டு, “அம்மா, உங்கள் ஆசீர்வாதமே எனக்குப் போதும், அதுவே எனது பெரிய பீஸ்” என்று கூறுகிறார்.
இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம் என்பது பல இடங்களில் வியாபாரமாக மாறிவிட்ட நிலையில், இந்த மருத்துவரின் செயல் பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. அந்த மூதாட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரும், அவர் மருத்துவருக்கு வழங்கிய மனமார்ந்த வாழ்த்துகளும் எத்தகைய கோடி ரூபாய்க்கும் ஈடாகாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
A doctor treated a special child without charging money.
MOTHER : “Please take the money.”
Doctor gently refused to take money.
Touched by his compassion, she folded her hands and offered heartfelt blessings ❤️ pic.twitter.com/ZCeJpzMYIL
— News Algebra (@NewsAlgebraIND) January 5, 2026
“>
“பணம் வரும் போகும், ஆனால் ஒருவரின் ஆத்மார்த்தமான ஆசீர்வாதம் நம்மை வாழ்நாள் முழுவதும் காக்கும்” என இந்த வீடியோவைப் பார்க்கும் லட்சக்கணக்கான மக்கள் அந்த மருத்துவரைப் பாராட்டி வருகின்றனர்.
