தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு தந்தை மற்றும் அவரது மகன் பயணம் செய்த இருசக்கர வாகனத்தின் மீது பள்ளி பேருந்து பயங்கரமாக மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது.
அந்த வீடியோவில், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த பள்ளி பேருந்து எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதுகிறது. பேருந்து மோதிய வேகத்தில் தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டனர். பேருந்தின் சக்கரங்களுக்கு மிக அருகில் அவர்கள் விழுந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
Location : Hyderabad
In India, risk is normal,until it turns into a surprise !!
That biker might have squeezed many times like that before.
That bus driver might have turned many times like that before.But nobody told them what’s wrong !pic.twitter.com/qRGzPPx2Wq
— DriveSmart🛡️ (@DriveSmart_IN) December 25, 2025
“>
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. பேருந்து மோதிய தருணத்தில், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து காயமடைந்தவர்களுக்கு உதவினர்.
மேலும் விபத்து நடந்த விதம் மிகவும் பயங்கரமாக இருந்தபோதிலும், தந்தை மற்றும் மகன் இருவரும் ‘அதிசயிக்கத்தக்க வகையில்’ பெரும் ஆபத்திலிருந்து மீண்டது அனைவரையும் நிம்மதியடைய செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் எழுப்பியுள்ளது.
