திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி. நகர் அருகே சாலையில் அலைந்து திரிந்த ஒரு பசுமாடு திடீரெனக் குறுக்கே வந்ததால், அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், வேனில் பயணித்த தனியார் ஆலை ஊழியர்கள் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். மேலும், வேன் மோதியதில் குறுக்கே வந்த அந்த பசுமாடு உயிரிழந்தது.