கருமை நிறத்தைக் காரணம் காட்டி ஒரு இந்தியக் குழந்தையைத் குறிவைத்து துன்புறுத்துவது என்பது அதிர்ச்சியளிக்கும் உச்சபட்ச கொடூரம். பள்ளியில் தனது நிறத்திற்காகக் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான அந்தக் குழந்தை, தனிமைப்படுத்தப்பட்டு, குழப்பமடைந்தாள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவள் தனது தோல் நிறம் சற்றுக் குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறியது, நிறவெறியால் ஒரு இளம் மனதில் ஏற்படும் மனதளவில் பாதிப்பை வெளிப்படுத்துகிறது.

இது போன்ற சம்பவங்கள், சகிப்புத்தன்மையைப் பற்றி கிழக்கத்திய நாடுகளுக்கு அறிவுரை கூறும் மேற்கத்திய சமூகங்களிலேயே நிறவெறி இன்றும் நிலைத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குழந்தைகளுக்கு எதிரான நிறவெறித் தாக்குதலுக்கு எந்தக் கலாசார வேறுபாடோ, பேச்சுரிமையோ அல்லது அரசியல் பின்னணியோ காரணத்தை கூறி நியாயம் கற்பிக்க முடியாது.

குழந்தைகள் மீது செலுத்தப்படும் இத்தகைய இனவெறி  தாக்குதல்கள் ஆழமான மற்றும் நீடித்த உணர்ச்சிப்பூர்வமான வடுக்களை விட்டுச் செல்கின்றன. இது அவர்களின் சுயமரியாதை, சமூகம் பற்றிய புரிதல், மற்றும் உலகத்தைப் பற்றிய அவர்களின் எண்ணங்களைப் பாதிக்கிறது.

“>

 

இதுகுறித்து ஒரு X பயனர், “இதே பிரச்சனைக்காகக் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட என் குழந்தைக்கு நான் தீவிர சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் என் குழந்தை கோபத்தைக் காண்பித்ததை நான் பார்த்தேன். பள்ளிக்கூடம் இதை கவனிப்பதாகக் கூறிவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற எதிர்வினைகள், இனவெறியை சிலர் சாதாரணமாகப் புறக்கணித்துச் செல்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. மேலும், குழந்தைகள் தங்களைச் சமூகம் பாதுகாக்குமா என்று விவாதிப்பதை விட்டுவிட்டு, நிபந்தனையின்றி அவர்களுக்கு இரக்கம் காட்டாத வரை, சமூகத்தின் தார்மீக மேன்மை குறித்த கூற்றுக்கள் அனைத்தும் பொருளற்றதாகவே இருக்கும்.