கொடிய விலங்குகளிடமிருந்து விலகியிருப்பது எப்போதுமே நல்லது என்றபோதிலும், பலர் அவற்றிற்கு உணவளிக்கவோ அல்லது வேடிக்கை பார்க்கவோ அவற்றின் அருகில் செல்வதுண்டு. முதலைகள் மிகவும் கொடூரமான விலங்குகளில் ஒன்றாகும். அவற்றின் தாடையில் ஒருமுறை ஒரு இரை சிக்கிவிட்டால், அதிலிருந்து தப்பிப்பது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒன்றாகும். இந்த அபாயத்தை உணராமல் ஒரு வாலிபர் முதலைக்கு உணவு அளித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தக் காணொளியில், நீண்ட தாடி வைத்த ஒரு நபர் படகில் அமர்ந்துகொண்டு ஆற்று நீரில் இருந்த முதலைக்குத் தனது கையைப் பயன்படுத்தி உணவு கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த வாலிபர் முதலைக்கு உணவு கொடுத்துக்கொண்டிருந்தபோது, திடீரென அந்தக் கொடூர விலங்கு அந்த வாலிபரை தாக்கி, அவரது கையைப் பலமாகத் தனது தாடையில் பிடித்துக் கொண்டது. வலியால் அவர் முகம் துடிப்பதைக் காண முடிந்தது.

இருப்பினும், அந்த வாலிபர் அதிவேகமாகத் தனது கையை திரும்ப இழுத்துக்கொண்டதால், பெரும் காயம் ஏற்படுவதிலிருந்து தப்பித்துக்கொண்டார். ஒரு கணம் தாமதித்திருந்தாலும், முதலை அவரைத் தண்ணீருக்குள் இழுத்துச் சென்றிருக்கலாம். இந்த அதிர்ச்சி காணொளியைப் பார்த்த பல பயனர்கள், “இவரது கை இரும்பினால் செய்யப்பட்டிருக்கலாம்” என்றும், “அந்த வாலிபர் இரும்பாலானவர்” என்றும் வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.