சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோ மிக வேகமாக வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில், விழுப்புரம் மாவட்டம் காந்தி சிலை அருகே பரபரப்பான சாலையின் ஓரத்தில் ஒரு நாய் நின்றுகொண்டிருக்கிறது. அந்த நாய்க்கு காலில் குறைபாடு உள்ளதால், வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் சாலையைக் கடக்க முடியாமல் அது தவித்துக்கொண்டு இருந்தது. இதனைக் கவனித்த ஒரு காவலர், உடனடியாகச் சாலையின் நடுவே வந்தார்.
வாகனங்களைச் சிறிது நேரம் நிறுத்திய அவர், பின்னர், அந்த நாய்க்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், மிக மெதுவாக அதன் அருகில் சென்று, மிகுந்த அக்கறையுடன் சாலையின் மறுபுறம் வரை பாதுகாப்பாக நடத்திச் சென்றார்.
சாலையில் வாகனங்கள் நின்றதால் சற்று குழப்பம் நிலவினாலும், காவலரின் இந்த மனிதநேயச் செயலைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகள் சத்தமில்லாமல் புன்னகைத்தனர்.
விழுப்புரம்: காந்தி சிலை அருகே, சாலையை கடக்க முடியாமல் தவித்த, கால் குறைபாடுள்ள நாயை, சாலையை கடக்க உதவிய காவலரின் செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது#Viluppuram | #Dog | #Police | #Road | #Viralvideo pic.twitter.com/vEksX2xgSc
— PttvOnlinenews (@PttvNewsX) October 23, 2025
கடமைக்கு அப்பாற்பட்டு, வாயில்லா ஜீவன்களின் மீது கருணை காட்டிய அந்தக் காவலரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. காவல்துறை அதிகாரி ஒருவர், தான் அணிந்திருக்கும் சீருடையின் மூலம் கடமையுணர்வையும், அதே சமயம் இதுபோன்ற எளிய செயல்கள் மூலம் மனிதநேயத்தையும் நிலைநாட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
