சமூக ஊடகங்களின் மூலம் அவ்வப்போது வைரலாகும் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் மக்களின் புதுமையான யோசனைகளை வெளிப்படுத்துகின்றன. சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது, அதில் ஒரு பெண் வாஷிங் மெஷினில் பாத்திரங்களைக் கழுவினார். மற்றொரு வீடியோவில், ஒருவர் வாஷிங் மெஷினைப் பயன்படுத்தி உருளைக்கிழங்கு தோலுரித்தார்.
View this post on Instagram
இப்போது ஒரு நபர் உடைந்த வாஷிங் மெஷினைப் பயன்படுத்தி களிமண் பாண்டங்கள் தயாரிக்கிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் aapkaculture என்ற கணக்கில் பதிவிடப்பட்டு, 26,000-க்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது. இதைப் பார்த்தவர்கள் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு, இந்த புதுமையான யோசனையைப் பாராட்டியுள்ளனர்.
