பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சிகர சம்பவத்தில், உணவு டெலிவரி தாமதமானதால் Zomato நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவரை இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. ஷோபா திரையரங்கம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் முழு காட்சியும் கைபேசி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@ACPBypuraBCP @BlrCityPolice @zomato shobha theatre babuji nagar Bengaluru 560026
ek zomato delivery boy ke sath haiwaniyat pic.twitter.com/yEtcYwGjPk— عبدالرب (@abdurrab00) September 16, 2025
வீடியோவில், டெலிவரி ஊழியர் உணவை கொண்டு வந்ததும், அந்த இடத்தில் இருந்த இருவர் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். வாய் தகராறாகத் துவங்கிய விவாதம், சில நிமிடங்களில் வன்முறையாக மாறுகிறது. இதில் ஒருவன் பிளாஸ்டிக் பெட்டியால் டெலிவரி ஊழியர் தலையில் அடிக்க, மற்றொருவன் நாற்காலியால் தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. மேலும் ஒருவன், அந்த டெலிவரி ஊழியர் இருசக்கர வாகனத்தில் ஏற முயற்சிக்கும் அட்டகாசமும் காணப்படுகிறது.
தாக்கியவர்களில் ஒருவர் மதுபோதையில் இருப்பது போல தோன்றியிருக்கிறார். போலீசார் சம்பவ இடத்தில் தற்சமயம் வந்து இரு தரப்பின் விளக்கங்களையும் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ எஃப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை. இதேவேளை, கடந்த மாதம் ஹைதராபாத்தில் ஒரே நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் திறந்த வடிகாலில் விழுந்து காயமடைந்த சம்பவம் மற்றும் சேதங்களைப் பொறுப்பேற்க வேண்டும் என ஜிக் வேலைதாரர்களின் சங்கம் Zomato-விடம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
