ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் நஹர்கர் பகுதியில் உள்ள அரசு நடத்தும் RTDC-யின் ‘படாவ்’ ரெஸ்டாரண்டில், சுற்றுலா வந்த பெண்கள் மற்றும் ஊழியர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், விவாதம் காரணமாக தகராறு தொடங்கி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

சண்டை காட்சிகளில் பெண்களும் ஊழியர்களும் ஒருவருக்கு ஒருவர் லாத்தி, கைகளால் தாக்கும் வீடியோக்கள் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மழை காரணமாக வெளியே அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள், உலர்ந்த இடத்திற்காக அக்கழகத்துக்குள் வந்துள்ளனர். ஆனால் அவர்கள் அமர்ந்த இடம் முன்பே முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால் ஊழியர்கள் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு  கேட்டுள்ளனர்.

இது மிகுந்த கோபத்தை ஏற்படுத்த, சொற்களால் தொடங்கிய வாக்குவாதம் தாக்க ஆரம்பித்தது. ரெஸ்டாரண்ட் மேனேஜர் பகத் தெரிவித்ததாவது, “சிறுவர்களிடம் நாங்கள் நன்றாகவே பேசினோம், ஆனால் அவர்கள் ஏற்க மறுத்தனர். பிறகு தகராறு ஏற்பட்டது,” என கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் ப்ரஹமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் ஆய்வாளர் ராஜேஷ் கவுதம் தெரிவித்ததாவது, “இரு பிரிவுகளும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது,” எனத் தெரிவித்தார். இது தொடர்பான கைது விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், சம்பவ வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.