சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்று சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ள ஒரு காணொளியில், ஒரு நபர் யானையைத் தொந்தரவு செய்து, உயிருக்கு ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளார். இந்தக் காணொளியில், அந்த நபர் யானையின் பின்னால் நின்று, கைகளைத் தட்டி அதைக் கோபப்படுத்த முயற்சிக்கிறார். முதலில் பொறுமையாக இருந்த யானை, ஒரு கட்டத்தில் கோபமடைந்து அவரை விரட்டத் தொடங்குகிறது. இந்தச் செயல், வனவிலங்குகளைத் தொந்தரவு செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது.
உயிருக்கு பயந்து ஓடிய அந்த நபர், யானை விரட்டுவதை நிறுத்திய பிறகும் மீண்டும் அதே செயலைத் தொடர்கிறார். இதனால், யானை மீண்டும் கோபமடைந்து, அவரை மிதிப்பது போல் கால்களை அசைக்கிறது. இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
