இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் தூய்மை பணியாளர் ஒருவர் சாலைகளில் கிடக்கும் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது மழைநீர் தேங்கிய இடத்தில் ஒரு வெள்ளை நிறத்தில் பை ஒன்று கிடந்தது. இதனை அவர் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை.
View this post on Instagram
நீர் தேங்கி கிடந்ததால் அதில் இறங்கி எடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் நீருக்குள் சென்றால் அவர் அணிந்திருந்த ஷூ அழுக்காகி விடும் என்பதற்காக அவர் தலைகீழாக சென்று அதனை எடுத்து வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
