
திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு நெல்லையப்பர் கோவில் ஆணிப் பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு, தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்க உள்ளனர். நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆணி பெருந்திருவிழா மிகவும் விசேஷமானது.
இந்நிலையில் இந்த நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதை ஒட்டி ஜூலை எட்டாம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.