
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் திருமண உறவின் நம்பிக்கையை சிதைக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காதலனுடன் மனைவி தப்பியோடியதாக மனமுடைந்த கணவர் விஷம் குடித்து உயிருக்கு போராடும் நிலைக்கு சென்றுள்ளார். மேலும் தனது மனைவியை, அவரது மாமனார் ரூ.10 லட்சத்திற்கு விற்றுவிட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் பிர்வார் பகுதியைச் சேர்ந்த பஞ்சாரா மொஹல்லாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் மோனு பஞ்சாரா என்பவர். இவரது மனைவி ஜூன் 19ஆம் தேதி தரம்வீர் பஞ்சாரா என்பவருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. தனது மனைவியை, மாமனார் சத்ரபால் பஞ்சாரா, மைத்துனர் சுமித் பஞ்சாரா மற்றும் மற்றொருவருடன் சேர்ந்து திட்டமிட்டு கடத்தி விட்டதாகவும், திருமண நகைகள் மற்றும் ₹2 லட்சம் மதிப்பிலான பணத்தையும் கொள்ளையடித்துவிட்டதாகவும் மோனு குற்றம் சாட்டினார்.
இந்த நிகழ்வால் மனமுடைந்த மோனு விஷம் குடித்த நிலையில் உறவினர்கள் அவரை உடனடியாக பிதர்வார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தொடக்க சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் குவாலியர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மனைவியின் மொபைல் சிக்னல் அடிப்படையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், “நான் கணவருடன் வாழ விரும்பவில்லை” என்று கூறியுள்ளதாகவும், திங்கட்கிழமை பிதர்வாருக்கு திரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் முற்றிலும் குடும்பத்தின் நம்பிக்கையையும் சமுதாயத்தின் ஒழுங்கிய அணுகுமுறையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மேலும் சமீபகாலமாக கள்ளக்காதல் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகுப்.