மின்துறை அமைச்சர் சிவசங்கர் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு தற்போதைக்கு இல்லை எனவும், அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் எனவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, முதலமைச்சர் அவர்களில் வழிகாட்டுதலின்படி ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும் போது வீட்டு மின் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் எந்த ஒரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும்  கூறியுள்ளார்.