
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்துள்ள தக்லைப் திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. அதாவது கன்னட மொழி தொடர்பாக நடிகர் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்டால் தான் படம் வெளியாகும் என கர்நாடக அரசு கூறியது.
அதன் பிறகு அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர்களும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால்தான் படத்தை வெளியிட முடியும் என்று கூறினர்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கமல்ஹாசனை உயர்நீதிமன்றம் எப்படி மன்னிப்பு கேட்க சொல்ல முடியும் என கூறியதோடு சட்டப்படி தக்லைப் திரைப்படம் வெளியாக உரிமை இருப்பதால் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தக்லைப் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு என தெரிவிக்கப்பட்டுள்ளது.