கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சிவராமபுரா பகுதியில் பிரஜ்வல் (22), சகானா (21) என்ற 2 நடன கலைஞர்கள் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நடனம் ஆடுவதை தொழிலாக கொண்டிருந்த நிலையில், சினிமா, திருவிழாக்கள், திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளில்  நடனமாடி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் நடனமாடினர்.  நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் இருவரும் இரவு இருசக்கர வாகனத்தில் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது  எதிரே வந்த லாரி ஒன்று அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில்  தூக்கி வீசப்பட்ட  பிரஜ்வல், சகானா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலங்கல்களையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டுனர் வேகமாக ஓட்டியதால் விபத்து நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.  இதைத்தொடர்ந்து ஓட்டுனரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.