
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தில் இருந்து கோவா செல்ல முயன்ற தம்பதிகள் சந்தித்த சிக்கல் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாராயம்மரேஜ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஜூன் 3ஆம் தேதி தனது மனைவியை சூரியவான் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அன்றைய இரவு இருவரும் கோவாவிற்குச் செல்ல பிரயாக்ராஜ் ரயில் நிலையம் வந்துள்ளனர். ஆனால் ரயிலில் ஏறுவதற்கு முன்பே அந்த இளைஞர் திடீரென காணாமல் போனதால் மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தனது கணவர் காணாமல் போனதைத் தொடர்ந்து, மனைவி தனது மாமனார் வீட்டிற்கு சென்று, பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குடும்பத்தினர் பெரும் பதற்றத்தோடு அவரைத் தேடும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 13ஆம் தேதி அந்த இளைஞர் திடீரென வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து முழு சம்பவத்தின் உண்மை வெளியாகியுள்ளது.
அதாவது கோவாவில் தனது தந்தையுடன் வேலை பார்த்துவரும் அந்த இளைஞர், “தன் மனைவியின் பழைய நண்பர்கள் இருவர், ரயில் நிலையத்தில் தன்னை அடித்து, கொல்கத்தாவுக்குச் செல்லும் ரயிலில் ஏற்றி கடத்தி சென்றனர்,” என கூறியுள்ளார்.
மேலும், “தன் மனைவியின் முன்னிலையில் அவர்கள் என்ன அடித்தார்கள். ஆனால் அவளை ஏதும் செய்யவில்லை. பின்னர் கொல்கத்தாவில் என்னை மிரட்டி வைத்திருந்தனர். எனக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு மிரட்டல் விடுத்தனர். ஆனால் எப்படியோ தப்பித்து வீட்டுக்கு திரும்பிவிட்டேன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம், மத்தியப் பிரதேசத்தில் நடந்த ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கை நினைவூட்டும் வகையில் இருந்தாலும், இங்கு கணவர் உயிருடன் திரும்பி வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் சாராயம்மரேஜ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இது சூரியவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருப்பதால், அங்கு வழக்கு மாற்றி விசாரணை செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீசார் இந்த கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இநஙசம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால், விரைவில் மனைவியின் பழைய தொடர்புகள் குறித்த உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.