
திருச்சியில் சட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, சட்டம் படிக்கச்செல்லும் மாணவி ராகினியை சந்தித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்தினார். இது குறித்த அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் வழியில், அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பயின்று, CLAT-இல் தேர்ச்சி பெற்று, சட்டம்பயிலச் செல்லும் மாணவி ராகிணியைச் சந்தித்து வாழ்த்தினேன்!
சாதனைகள் பல படைத்திடும் நமது திராவிட மாடல் திட்டங்களுக்குக் கையெழுத்திட்ட எனது பேனாவை, சாதனைகள் பல படைத்திட வேண்டும் என வாழ்த்தி ராகிணிக்குப் பரிசளித்தேன்! என்று தெரிவித்துள்ளார்.