
திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தின் கண்டக்டராக மோகன்(56) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்து கொண்டு சென்றனர்.
அங்கு கண்டக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.