தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில். இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இதன் காரணமாக எப்போதும் கோவிலில் கூட்டம் காணப்படும்.

இந்நிலையில் நாளை திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

இதன் காரணமாக நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் செயல்படாது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக மே 14ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.