
ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14, 2025 வரை மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, எந்தவொரு புதுப்பிப்புக்கும் ரூ.50 கட்டணத்துடன் ஆதார் பதிவுக் கூடத்துக்குச் சென்று செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது என யூனிக் ஐடென்டிபிகேஷன் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) அறிவித்துள்ளது.
UIDAI விதிமுறைகளின்படி (Aadhaar Enrolment and Update Regulations, 2016), ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் ஒரு முறை, உங்கள் அடையாள ஆவணங்கள் (PoI) மற்றும் முகவரி ஆவணங்கள் (PoA) ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும். இது ஆதார் விவரங்கள் பரிசோதிக்கப்படவும், துல்லியமாக இருக்கவும் உதவும். ஜூன் 14க்கு பிறகு எந்தவொரு தகவல் மாற்றத்தையும் செய்ய வேண்டும் என்றால், நெருங்கிய ஆதார் மையத்துக்குச் சென்று ரூ.50 கட்டணத்துடன் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்நிலையில் தற்போது ஆதார் ஆதார் அட்டையை எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். அதன்படி
1. UIDAI இணையதளத்தில் உள்ள myAadhaar போர்டலை திறக்கவும்.
2. உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை பதிவு செய்து உள்நுழையவும்.
3. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை உள்ளீடு செய்து உறுதிப்படுத்தவும்.
4. உங்களின் தற்போதைய PoI மற்றும் PoA ஆவணங்களை சரிபார்க்கவும்.
5. புதுப்பிக்க வேண்டுமெனில், “Document Update” விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
6. புதுப்பிக்க வேண்டிய ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து, தெளிவான ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை JPEG, PNG, அல்லது PDF வடிவத்தில் (2MB-க்கு உட்பட்ட அளவில்) பதிவேற்றவும்.
முக்கியக் குறிப்புகள்: பயோமெட்ரிக் தகவல்கள் (விரல் ரேகை, கண் நார் ஸ்கேன், புகைப்படம்) ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது. இதற்காக ஆதார் மையத்திற்கே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இவ்வாறு, ஆதார் விவரங்களை இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்க விரும்புவோர், ஜூன் 14, 2025க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கட்டணத்துடன் நேரில் சென்று புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும்.