கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சுற்றி பாண்டிய குப்பம், தொட்டியம், சிறுமங்கலம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது  ஒரே நாளில் 4 பெண்கள் வெவ்வேறு நேரங்களில் காணாமல் போனதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் படி பூமிகா (22), தனுஜா(19), சந்தியா, பவித்ரா ஆகிய பெண்கள் மாயமானதாக காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

இவர்கள் அனைவரும் வெவ்வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஒரே நாளில் மாயமாகியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காணாமல் போன பெண்களை மீட்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.