
பதவி உயர்வுக்காக வேண்டி குடும்பத்தை கவனிக்காமல் வாழ்க்கையை சமீப காலமாக இளைஞர்கள் இழந்து வருகின்றனர். இதேபோன்று சமீபத்தில் சமூக ஊடகத்தில் பெயர் குறிப்பிடாத ஐடி ஊழியர் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில் அவர் கூறியதாவது, ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை உழைத்து ரூபாய் 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளர் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளேன். இருந்தும் நான் வெறுமையாகவும், அலட்சியமாகவும் உணரப்படுகிறேன்.
3 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையில் சேர்ந்து அங்கு பதவி உயர்வுக்காக அதிகப்படியான பணிகளை செய்து வந்தேன். எனது மீட்டிங் காலை 7:00 மணி தொடங்கிய இரவு 9:00 மணி வரை நடைபெறும். இதனால் என் மகள் பிறந்தநாளில் கூட கலந்து கொள்ள முடியாமல் போனது. எனது மனைவி பிரசவத்திற்கு பிந்தைய நாட்களில் கூட அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட எல்லா நாட்களிலுமே மீட்டிங்கில் இருந்தேன். இதனால் என் மனைவி என்னிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். இன்று எனக்கு பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்டது என்ற நல்ல செய்தி கிடைத்தும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
என் வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என என்னை நான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த குழப்பமான சூழ்நிலையில் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன் ஆனால் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? வேலையின் காரணமாக குடும்ப மகிழ்ச்சியின் முக்கியமான தருணங்களில் இல்லாமல் போனது, பதவி உயர்வு ஆசை எனது குடும்ப வாழ்க்கையை நெருக்கடியான நிலைக்கு தள்ளி விட்டது என உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.