
ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தா. இவருக்கும் காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரரான துணை தளபதி அவினாஷ் குமாருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 12ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் திருமணம் நடைபெற வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி மாளிகையில் ஒரு திருமணம் நடைபெற உள்ளது.
அதாவது பூனம் குப்தாவின் பணி மற்றும் அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்த்து நெகிழ்ந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் திருமணத்தை நடத்த அனுமதி கொடுத்துள்ளார். மேலும் இந்த திருமண விழாவில் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.