
பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும். இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் பத்ம விருதுகள் ஒன்றாகும். பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை பத்ம விபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ. இந்த நிலையில் இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமரால் இந்தியாவின் உயரிய விருதுகள் ஆன பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 19 பேருக்கு பத்மபூஷன் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 139 ஆகும். இதில் பத்ம விபூஷன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் 7 பேர். அவர்கள், இரப்பை குடலியர் நிபுணர் துவூர் நாகேஸ்வர் ரெட்டி, கதக் நடனக் கலைஞர் குமுதினி லகியா, வயலின் இசைக்கலைஞர் லட்சுமி நாராயண சுப்ரமணியம், முதல் சீக்கிய தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் ஆகியோர்களுக்கும்.
மேலும் மூன்று நபர்களுக்கு மறைவுக்குப் பின் பத்ம விபூஷன் வழங்கப்படுகிறது. இதில் மறைந்த எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், மறைந்த தொழிலதிபர் ஒசாமு சுசுகி, மறைந்த பாடகி ஷ்ரத்தா சின்ஹா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.