இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. பலர் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதால் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சிலர் செல்போனில் மூழ்கி விடும் போது அக்கம் பக்கத்தில் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட கவனிக்கவில்லை. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் சில வாலிபர்கள் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி கேம் விளையாடி உள்ளனர்.

அதாவது சாம்பாரண்‌ மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தில் 3 வாலிபர்கள் அமர்ந்து காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ரயில் வாலிபர்கள் மீது மோதியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.