
மதுரையில் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) தனது தந்தை லோகநாதனுக்கு (60) 3 லட்ச ரூபாய் கடனாக கொடுத்திருந்தார். தீபாவளி சீட்டு பிடித்ததில் வந்த பணத்தை தனது தந்தைக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் பல மாதங்கள் கழித்தும் பணத்தை திருப்பித் தராததால், மகனுக்கும் தந்தைக்கும் இடையே தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் கார்த்திக், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தந்தை லோகநாதனின் கழுத்தை அறுத்து கொடூரமாக படுகொலை செய்துள்ளார்.
தந்தையின் உயிரை பறித்த பின்பு, கார்த்திக் நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இது மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.