தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போலி செய்திகள் அதிக அளவு இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் இது போன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தரவரிசை பட்டியலுடன் மாணவர்கள் செல்போன் எண்களை சேர்த்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை தொடர்பாக தகவல்களை சில விஷமிகள் சுயநலத்திற்காக வெளியிட்டுள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.