தமிழக சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இவர் தற்போது பெண்களுக்கு ஆப்ரேஷன் மூலமாக மகப்பேறு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பெண்களுக்கு சமீப காலமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறப்பது அதிகரித்துள்ளது. சுகப்பிரசவம் என்பது குறைந்து வருகிறது.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக பெண்கள் அதிக அளவில் வேலை பார்த்தனர். அதனால்தான் அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்தது. ஆனால் தற்போது பெண்களுக்கு பணிசுமை குறைந்துவிட்டது. இதனால்தான் சிசேரியன் பிரசவம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுகப்பிரசவங்கள் என்பது அதிகரிக்க வேண்டும். மேலும் இந்தியாவிலேயே சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்.