ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர்  வீட்டில் தையல் தைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுபகுதிக்கு  சென்றுள்ளார் . ஆனால் நீண்ட நேரம் ஆகிய வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். அப்பொழுது அங்குள்ளவர்கள் முட்புதரில்  இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பதாகவும் உடல் முழுவதும் பலத்த காயமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதை பார்த்து பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு  வந்த காவல் துறை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து குறித்த தீவிர விசாரணையில் தலைமறைவாக இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சம்பவம் நடந்த இடத்தில் மூன்று பேரும் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அப்போது அந்த வழியாக சென்ற இளம் பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு முட்புதரில் வீசியதும் தெரியவந்துள்ளது.