சீமானுக்கு வெளியில் இருந்து பணம் குவிந்து வருவதாக பலர் கூறிவந்த குற்றச்சாட்டுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார் அதில், எனக்கு 1100 கோடி வந்திருக்காம் எவனோ எட்டி பார்த்து இருக்கான். நாங்கள் எங்கள் தலைவன் பிரபாகரன் வழியில் செல்கிறோம். எங்கள் தலைவன் எங்களுக்கு கோடி கொடுத்தார் அல்ல, உயர்ந்த கொள்கைகளை கொடுத்துள்ளார் . அவர் எங்களுக்கு இலட்சங்களை தரவில்லை. உயர்ந்த லட்சியத்தை தந்துள்ளார்.

இருந்தால் தலைவன் இறந்தால் அவன் இறைவன் 2000 ஆண்டுகளாக நாம் தூக்கிச் சுமந்த கனவை நம் தலைவன் தூக்கி சுமந்தான். அவன் பிள்ளைகள் நாம் தலைவரின் நினைவை சேர்த்து சுமக்கிறோம் அவ்வளவுதான். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. கோட்பாடு ஒன்றுதான், வந்தவர் எல்லோரையும் வாழ வைப்போம். இனியும் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம். வாழும் உரிமை எவருக்கும் உண்டு. ஆளும் உரிமை தமிழர் எனக்கே உண்டு. எல்லாரும் ஒன்றாக  நிற்போம். ஆனால் நாங்கள்தான் சற்று முன்னாடி நிற்போம்.