தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். வேறொருவர் பெயரில் உள்ள வாகனத்தில் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டப்படக்கூடாது. முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் 500 ரூபாய், இரண்டாவது முறை 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 2 நாளை முதல் அமலுக்கு வருகின்றன.