
திமுக வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், நம்முடைய திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பமும் ஏதோ உரிய விதத்தில் பயன் அடைந்து கொண்டிருக்கிறது. அப்படி பார்த்து பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் மக்கள் நம் ஆட்சி மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான பெண்களுக்கு பயன் அளிக்கக்கூடிய திட்டம் தான் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா விடியல் பயணம்.
ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. 45 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பெற்று வந்த.. பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆயிரம் ரூபாய் உதவி தொகையை 1200 ஆக ஆக்கியிருக்கிறோம். 18 லட்சம் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு காலை உணவு திட்டம். 13 லட்சம் பெண்களுடைய கடன் ரத்து.
இப்படி கோடிக்கணக்கான.. லட்சக்கணக்கானவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் திட்டங்களை நிறைவேற்றுவது தான் நம்முடைய அரசு. நம்முடைய திராவிட மாடல அரசு. இதையெல்லாம் நீங்கள் மக்களிடம் போய் எடுத்து சொல்லணும். நம்முடைய திட்டங்கள் மூலமாக பயன் அடைந்தவர்கள் ஊடகங்களில் சில நேரங்களில் பார்க்கிறோம், பேட்டிகள் எல்லாம் தராங்க… உள்ளத்தில் இருந்து பேசுறாங்க, மகிழ்ச்சியாக இருக்கு என தெரிவித்தார்.