கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் குறிச்சி பிரிவில் அப்துல் ரஷீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அப்துலிடம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ் உள்ளிட்ட நான்கு பேர் குறைந்த அளவு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி அப்துல் அவர்களிடம் 8 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர்கள் லாபத்தை தரவில்லை பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்துல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அப்பாஸ் உள்பட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம்… ரூ.8 லட்சம் மோசடி செய்த 4 பேர்… போலீஸ் விசாரணை…!!
Related Posts
கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி…. அடுத்த நிமிடமே உயிரிழப்பு… அதிர்ச்சி…!!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசை நடைபெற்றது. இதில், ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை பூசாரி பழனிசாமி (45) குடித்து வந்தார். இந்த நிலையில், ஒரு ஆட்டின் ரத்தத்தை குடித்த பூசாரி,…
Read moreபெற்றோர் பைக் வாங்கிக் கொடுக்காததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… திருப்பத்தூரில் சோகம்…!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் கோத்தாண்டபட்டி-வாணியம்பாடி ரயில்வே நிலையத்திற்கு இடைய புத்துக்கோவில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை…
Read more