கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் குறிச்சி பிரிவில் அப்துல் ரஷீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அப்துலிடம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ் உள்ளிட்ட நான்கு பேர் குறைந்த அளவு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி அப்துல் அவர்களிடம் 8 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர்கள் லாபத்தை தரவில்லை பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்துல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அப்பாஸ் உள்பட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.