கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் குறிச்சி பிரிவில் அப்துல் ரஷீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அப்துலிடம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ் உள்ளிட்ட நான்கு பேர் குறைந்த அளவு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி அப்துல் அவர்களிடம் 8 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர்கள் லாபத்தை தரவில்லை பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்துல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அப்பாஸ் உள்பட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம்… ரூ.8 லட்சம் மோசடி செய்த 4 பேர்… போலீஸ் விசாரணை…!!
Related Posts
கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!
சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…
Read more“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!
தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…
Read more