திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த திலகன் ஆகியோர் திருமண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராஜாவுக்கும் குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரேசன், கதிரேசன், திலகன் ஆகிய மூன்று பேரும் ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பால் தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ராஜாவின் தாய் திருமால் கனியையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசன் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“சரிந்து விழப்போகும் தவெக அரசு?”.. “விஜய் நாற்காலியில 2 கால் இரவல் கால்.! தவெக அரசுக்கு இபிஎஸ் கொடுத்த பதிலடி..!!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல் முற்றியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
Read more“ஆண்டுக்கு 3,600 கோடி ஊழல்.. மாசம் 100 கோடி தனி நபர் பைக்குப் போயிருக்கு!”.. கோவையில் வச்சு உண்மையை உடைத்த அமைச்சர் விக்னேஷ்..!!
“தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் விவகாரத்தில், தவெக அரசு அதிரடிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் தற்பொழுது வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். ‘டாஸ்மாக் துறையில் ஆண்டுக்கு சுமார் 3,600 கோடி ரூபாய் அளவிற்கு மெகா…
Read more