கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வின்சென்ட்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வின்சென்ட் குடிபோதையில் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் பகுதி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பொது மக்களிடம் ரகளை செய்துள்ளார். இதனையடுத்து வின்சென்ட் குடிதண்ணீர் குழாயையும் சேதப்படுத்தியுள்ளார்.

இதனை தட்டி கேட்டவர்களை வின்சென்ட் தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அரை நிர்வாண கோலத்தில் நின்று வின்சென்ட் பெண்களை கேலி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகளை செய்த வின்சென்ட்டை கைது செய்தனர். இதுபற்றி வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.