கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்காடு பகுதியில் பால் வியாபாரியான ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்ரீகுமார் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு பால் கொடுக்க செய்தார்.
அப்போது சுரேஷ் ராஜன் மற்றும் அவரது 13 மற்றும் 15 வயது மகன்கள் சேர்ந்து அரிவாளால் ஸ்ரீ குமாரை சரமாரியாக வெட்டினர். இதனால் படுகாயமடைந்த ஸ்ரீகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷ் ராஜன் உள்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.