சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் இன்ஜினியரிங் பட்டதாரியான பாலச்சந்திரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி இரவு பால சந்திரன், மண்ணூர்பேட்டை அருகே இருக்கும் பிரியாணி கடையில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது கடைக்கு பிரியாணி வாங்க வந்த ஒரு கும்பல் மீது பாலச்சந்திரன் தெரியாமல் இடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கத்தியால் பாலச்சந்திரனை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தம்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த பாலச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அஜித், சங்கர், வெங்கடேஷ், நெப்போலியன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.