சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பொன்னியம்மன்மேடு தேவகி நகரில் ஜெபஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். இந்நிலையில் ஜெபஸ்டின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த ஜெபஸ்டின் அந்த பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் மன உளைச்சலில் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.