கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொளஞ்சியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்த கொளஞ்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதுகுறித்து கொளஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மண்டபத்தில் தனி அறையில் இருந்த இளம்பெண்….” காதலனுடன் அடிக்கடி வந்து சென்ற காதலி…. நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி அருகே ஒரப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில், 21 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரத்திற்கு பின்னால் ஒரு கல்லூரி மாணவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் உள்ளதாகக் காவல்துறை…
Read moreநெல்லையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை… 10 பேருக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை கடந்த நேற்று ஜூன் 17ஆம் தேதி…
Read more