கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொளஞ்சியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்த கொளஞ்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதுகுறித்து கொளஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வருடத்தின் ஒரு நாள் மட்டுமே அற்புத தரிசனம்!”.. பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி கோவில் நடை திறப்பு..அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!!!
மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான அழகர்கோவிலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி கோயிலின் திருக்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வரும் ஆடிப் பெளர்ணமி திருநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு நிகழ்வு வெகு விமரிசையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக வருடத்திற்கு…
Read more“மாணவனை ரத்தம் வர வர அடி வெளுத்த HM” சாதியைச் சொல்லி திட்டியதாக எழுந்த பகீர் புகார்…. திருநெல்வேலியில் வெடித்த மாபெரும் சர்ச்சை….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் கடுமையான ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.…
Read more